காதல் தோல்வியால் உயிரை மாய்த்த வாலிபர்
- தனது உறவினர் ஒருவரது மகளை காதலித்து வந்துள்ளார்.
- மன உளைச்சலால் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கொத்த கொண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரம்மா. இவரது மகன் கிரண் (வயது 23). இவர் தனது உறவினர் ஒருவரது மகளை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இந்த காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அவரது காதல் கைகூடவில்லை. இதில் ஏற்பட்ட மன உளைச்சலால் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சந்திரம்மாள் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள இருதாலம் கிராமத்தை சேர்ந்த சில்பா (31) என்பவர் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து எலிமருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ராயக்கோட்டை அருகேயுள மோகலூரை சேர்ந்த முனிரத்தினம் (27) என்பவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமாண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முனிரத்தினம் பெற்றோர் கேட்காததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.