உள்ளூர் செய்திகள்

வேல்முருகன்.

வானூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

Published On 2023-02-17 08:45 GMT   |   Update On 2023-02-18 10:30 GMT
  • இவரும் இவரது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (18), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் இருந்து வானூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்
  • எதிரே வந்த ட்ராக்டரில் மோதி இரண்டு பேரும் பலத்த காயமடைந்தன ர்

விழுப்புரம்:

புதுச்சேரி மாநிலம் சந்தை புது குப்பத்தை சேர்ந்த பாவாடை ராயன் (வயது 27) இவரும் இவரது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (18), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் இருந்து வானூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி திண்டிவனம் நான்கு வழி சாலை தென்கோடி பாக்கம் மெயின் ரோட்டில் வரும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ட்ராக்டரில் மோதி இரண்டு பேரும் பலத்த காயமடைந்தன ர். காயம் அடைந்தவர்களை கிளியனூர் போலீசார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனிக்காமல் பாவாடைராயன் இறந்தார் .மேலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News