உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது

Published On 2022-11-17 12:30 IST   |   Update On 2022-11-17 12:30:00 IST
  • வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
  • திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.

கடலூர்:

வேப்பூர் போலீஸ் ஏட்டு ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் வேப்பூர் அருகே பெரியநெசலூரைச் சேர்ந்தவர் சசிக்குமார், (வயது37) என்பவர் ரேசன் அரிசி கடத்தல் ஏஜெண்டாக இருப்பதும், 3 டன் ரேசன் அரிசியை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News