குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
- தியாகராஜன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
- இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் காட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32). இவர் மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (25). இவர்களுக்கு விஷ்ணு(4) என்ற மகனும், கனிஷ்கா (2 1/2) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தியாகராஜன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த மீனாட்சி கடந்த 21-ந் தேதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து மீனாட்சியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனாட்சிக்கு திருமணம் ஆகி 7 வருடங்களே ஆவதால், இதுகுறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.