உள்ளூர் செய்திகள்

கெடார் அருகே ஏரியில் தவறி விழுந்த வாலிபர் மூச்சுத்திணறி பலி

Published On 2023-08-24 09:18 GMT   |   Update On 2023-08-24 09:18 GMT
  • இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.
  • ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் சின்னமணி (வயது 32), சென்னையில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றார். அப்போது இரவு இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.

அவருடன் வந்த நண்பர்கள் சிறிது நேரம் கழித்து உடன் வந்த சின்னமணியை காணவில்லை என தேடினர். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிந்து அவர்களும் ஏரி பகுதிக்கு வந்து தேடினர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து கெடார் போலிசாருக்கும். அன்னியூர்தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். கெடார் போலிசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் போனவர் ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

இதில் ஏரி நீரில் மூழ்கி இறந்து கடந்த சின்னமணியின் உடலை இன்று காலை 8 மணியளவில் தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். அதனை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News