உள்ளூர் செய்திகள்
பேனர் கட்டும் போது தவறி விழுந்த வாலிபர் பலி
- பொடுத்தம்பட்டி அருகே மின் கம்பத்தில் ஏறி பேனர் கட்டும் பொழுது தவறி கீழே விழுந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரெயில்வே நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது24). மேஸ்திரியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
நேற்று பொடுத்தம்பட்டி அருகே மின் கம்பத்தில் ஏறி பேனர் கட்டும் பொழுது தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பலியானார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.