கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி வாலிபர் சாவு
- கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
- கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சக்திவேல் மட்டும் எழுந்து சாலையை கடக்க முயன்றார்.
கள்ளக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சக்திவேல் (வயது 29). இவர் தனது நண்பர்களான ரவிச்சந்திரன், பிரசாத் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தலைவாசல்ல் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். துக்க நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சக்திவேல் மட்டும் எழுந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சக்திவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.