உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே மகன் கண் முன்னே லாரி மீது பைக் மோதி ஆசிரியர் பலி

Published On 2022-11-05 09:35 GMT   |   Update On 2022-11-05 09:35 GMT
  • வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது.
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 52). வீடூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருந்தார். இவரது மகன் சஞ்சய் (18) இவர்கள் இருவரும் பைக்கில் கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சஞ்சய் இரு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது வி.சாலை அகரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது பைக் மோதியது. இதில் விபத்தில் பைக்கில் இருந்து சஞ்சய் மற்றும் சகாதேவன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சகாதேவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மேலும் சஞ்சய்க்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் சகாதேவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயமடைந்த சஞ்சய் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மகன் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News