உள்ளூர் செய்திகள்

ஒற்றை யானை அட்டகாசம்

Published On 2023-04-21 07:43 GMT   |   Update On 2023-04-21 07:43 GMT
  • கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
  • தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.

இந்த யானை, அந்த பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

இதுகுறித்து செந்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள், சின்னத்தண்டா கிராமத்தில் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News