உள்ளூர் செய்திகள்

நெல்லை - திசையன்விளை 'என்ட் டு என்ட்' பஸ்களை இடைநில்லாமல் இயக்க கோரி கடையடைப்பு போராட்டம்- வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

Published On 2023-06-30 09:01 GMT   |   Update On 2023-06-30 09:01 GMT
  • திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.
  • இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

திசையன்விளை:

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.

கூட்டத்தில் நெல்லை- திசையன்விளை இடையே 'என்ட் டு என்ட்' என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு தினமும் காலை முதல் இரவு வரை தலா 10 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த இடைநில்லா பஸ்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடக்கும் இந்த பஸ்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வியாபாரிகள் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த பஸ்களில் எபோதும் கூட்டம் அலை மோதும். இந்தநிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலை யத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்ற னர்.

இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடு கிறது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடு கிறா ர்கள். எனவே முன்பு போல நெல்லை-திசையன்விளை 'என்ட் டு என்ட்' பஸ்களை இடைநில்லாமல் இயக்க கோரி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News