உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி

Published On 2023-02-09 09:25 GMT   |   Update On 2023-02-09 09:25 GMT
  • மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர்.
  • பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (வயது 16).

இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பேருந்து நிலையம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளனர்.

அப்பொழுது வேகத் தடையில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி லாரி பின்னால் மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற ஹரி பிரசாத் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மாணவர் ஹரி பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய உள்ளது.

Tags:    

Similar News