உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்

Published On 2022-12-30 14:08 IST   |   Update On 2022-12-30 14:08:00 IST
  • இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.
  • இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி சின்னபொண்ணு. இவருடைய கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.

இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாா் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News