உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல்ஜோடிைய படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-08-07 06:33 GMT   |   Update On 2022-08-07 06:33 GMT
  • திட்டக்குடி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
  • இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுநத்தம் கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது27). அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கவுசல்யா (23) இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதிர்ச்சி அடைந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்துகொள்ள முருகானந்தத்தை வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலர்கள் 2 பேரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த நிலையில் முருகானந்தம் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா தரப்பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர். பின்னர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு ஆவினங்குடி போலீஸ் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அதன்பின்னர் கவுசல்யாவின் பெற்றோர், உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News