உள்ளூர் செய்திகள்

மழை நீரில் மாணவர்கள் நடந்து செல்வதை படத்தில் காணலாம்.

சின்னசேலத்தில் மழையால் குளமாக மாறிய சாலை

Published On 2022-08-05 09:11 GMT   |   Update On 2022-08-05 09:11 GMT
  • சின்னசேலத்தில் சாலை மழையால் குளமாக மாறியது.
  • பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன சேலம் மற்றும அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன சேலம் மற்றும அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பருவ நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று பெய்த கன மழையால் மணிவண்ணன் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் செல்வதற்கு சிரமப்பட்டனர். மழை வரும்போதெல்லாம் மணிவண்ணன் மருத்துவமனை அருகே குளம் போல் மழைநீர் தேங்கி சாலை சேதம் அடைகிறது. இதனால் பலமுறை விபத்துகள் நேரிடுகிறது. விபத்துகளை தடுக்க இந்தப் பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News