தூத்துக்குடியில் இன்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் - ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகிறார்
- நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது மே 18 தின இன எழுச்சி பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டி யாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப் பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது மே 18 தின இன எழுச்சி பொதுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டி யாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப் பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார். கட்சி சார்பில் மே 18 தின முதல் மாநாடு பொதுக்கூட்டம் மதுரையில் நடை பெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடை பெற்றது.13-வது மாநாடு இன்று மாலை தூத்துக்கு டி-எட்டையாபுரம் சாலை சுங்கச்சாவடி அருகே புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.
மாநாட்டு விழா ஏற்பாடு களை மாநில ஒருங்கிணைப் பாளர்கள் வக்கீல் சிவக் குமார், இசைமதிவானன், மண்டல ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகி கள் முன்னிலையில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் கா.வள்ளி தூத்துக்குடி மாவட்டம் இரா. பட்டாணி, ஜெ.ரெஜின் மற்றும் அனைத்து மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.