மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வழங்கிய போது எடுத்த படம். அருகில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு ஆகியோர் உள்ளனர்.
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மற்றும் அட்மா தலைவர் தனராசு தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மணி , துணைத் தலைவரும், பேரூர் கழக செயலாளருமான ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர்கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.