உள்ளூர் செய்திகள்
தியாகதுருகத்தில் தனியார் ஏெஜண்டு திடீர் மாயம்
- இதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கடந்த 23- ந் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50) இவர் ஏஜெண்டாக இருந்தார். இதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23- ந் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் தயாதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.