உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2023-02-07 09:37 GMT   |   Update On 2023-02-07 09:37 GMT
  • களரம்பட்டி மெயின்ரோடு காலிக்கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ் - 2 படித்து வருகிறார்.
  • மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியதாக தெரிகிறது.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம், களரம்பட்டி மெயின்ரோடு காலிக்கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ் - 2 படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் சேலம் சங்கர் நகர் பகுதி சேர்ந்த சசிக்குமார் (32) என்ற வாலிபர், டயர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சசிக்குமார், மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியதாக தெரிகிறது. இதை பார்த்த பெற்றோர், மாணவியிடம் இதுபற்றி விசாரித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சசிக்குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News