உள்ளூர் செய்திகள்

சேவல் சண்டையில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

Published On 2023-01-16 09:20 GMT   |   Update On 2023-01-16 09:20 GMT
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆரியூர்பட்டி தண்ணீர் தொட்டி அருகில் பணம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கு சென்ற போலீ சார் சுற்றி வளைத்த போது, திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த சேகர்( 45) என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சேகரிடம் இருந்த சேவல் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News