சேலம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்த பயணி திடீர் சாவு
- நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார்.
- இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.
சேலம்:
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கிரில் தேவராஜ் (வயது 48), இவர் நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ் இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போரா டினார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரி வித்தார். 108 ஆம்புலன்ஸ் குழு வினர் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது . பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது.
இது குறித்து உறவினர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. அவர்கள் கத றிய படி சேலம் விரைந்து ள்ள னர். இந்த சம்ப வம் இன்று காலை பஸ் நிலை யத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.