உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமான மோட்டார் சைக்கிளை வாலிபர்கள் அகற்றினர்.

கடலூரில் இன்று லாரி மோதி மோட்டார் சைக்கிள் நசுங்கியது

Published On 2022-12-25 08:31 GMT   |   Update On 2022-12-25 08:31 GMT
  • டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து புதுப்பாளையம் நோக்கி மீராஷா (வயது 50) என்பவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கம்மியம்பேட்டை சாலைக்கு செல்வதற்காக டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மீராஷா தூக்கி வீசப்பட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியதால் டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தினார்‌. இதனை தொடர்ந்து காயம் அடைந்த மீராஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News