உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடந்தது.

அரசு பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம்

Published On 2022-09-24 10:23 GMT   |   Update On 2022-09-24 10:23 GMT
  • 1 முதல் 8-ம் வகுப்பு வரை வளரறி மற்றும் தொகுத்தறி தேர்வுகளை சரியான நேரத்தில் முடித்தல் வேண்டும்.
  • இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இடித்து அகற்ற வேண்டும்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் தாமோதரன் மற்றும் ஜெயலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் உடல்நல விவரங்கள் ஆகியவற்றை டி.என்.எஸ்.யி.டி செயலியில் பதிவேற்றம் செய்வது, 1 முதல் 8-ம் வகுப்பு வரை வளரறி மற்றும் தொகுத்தறி தேர்வுகளை சரியான நேரத்தில் முடித்தல், பள்ளிக்கு தொடர்ந்து வருகை புரியாத மாணவர்களை பள்ளிக்கு வருகை தர நடவடிக்கை எடுத்தல், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணி சார்ந்த பயிற்சிகளில் கலந்து கொள்வது, இல்லம் தேடி கல்வி மையங்களை சிறப்பாக நடத்துவது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை தகுதியுடைய மாணவர்களுக்கு பெற்று வழங்குவது, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இடித்து அகற்றுவது, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரத்தை தினசரி ஆய்வு செய்வது, நடுநிலைப்பள்ளிகள் தேசிய அளவிலான புத்தாக போட்டிகளில் கலந்து கொள்வது, அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியான மின்னஞ்சல் முகவரியினை உருவாக்குதல் ஆகியவை தொடர்பான கூட்டம் நடைப்பெற்றது.அரசு பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம்

Tags:    

Similar News