உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவியின் கள்ளக்காதலனை நண்பருடன் சேர்ந்து தாக்கிய மெக்கானிக்

Published On 2023-06-15 08:52 GMT   |   Update On 2023-06-15 08:52 GMT
  • படுகாயம் அடைந்த என்ஜினீயரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 32 வயது சிவில் என்ஜினீயர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக்கின் வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொண்டார்.

அப்போது என்ஜினீயருக்கு மெக்கானிக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் மெக்கானிக்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றார். இது மெக்கானிக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று என்ஜினீயர் புளியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மெக்கானிக் தனது நண்பருடன் சேர்ந்து என்ஜினீயரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த என்ஜினீயரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு என்ஜினீயருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News