உள்ளூர் செய்திகள்
பள்ளத்தில் மினிலாரி சிக்கியிருப்பதை படத்தில் காணலாம்.
டவுன் சாலியர் தெருவில் குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி
- மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
- பள்ளத்தில் சிக்கிய லாரியால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் சாலியர் தெருவில் கடந்த சில மாதங்க ளாக மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாய் அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சாலியார் தெரு வழியாக சென்ற மினி லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாலை போட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது கடந்த சில மாதங்களாக குழாய் பதிப்பதாகக்கூறி இருந்த சாலையையும் உடைத்து மண் சாலையாக மாற்றி விட்டார்கள். எனவே பணிகளை விரைந்து முடித்து தார்ச்சாலை போட வேண்டும் என்றனர்.