உள்ளூர் செய்திகள்
கடலூரில் இருந்து திண்டிவனத்திற்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி தடுப்பு கட்டையில் மோதி விபத்து
- திண்டி வனம் நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
- லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர்
கடலூர்:
கடலூர் அடுத்த செம்மங்குப் பத்தில் உள்ள அரசு அரிசி ஆலையில் இருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திண்டி வனம் நுகர் பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
இந்த லாரி அண்ணா கிராமம் சாலையில் சென்று கொண்டி ருந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர். சாலை யின் நடுவே போக்கு வரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி னர்.