உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-05-21 05:44 GMT   |   Update On 2023-05-21 05:44 GMT
  • திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • முருகன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார்

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் மனம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன்( வயது 55) தொழிலாளி. இவருக்கு 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி அனுராதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தை களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் போகாமலும் அப்படியே வேலைக்கு போனாலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி அனுராதா தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் விரத்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய முருகனைக் காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சை க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த அரகண்ட நல்லூர் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News