உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-09-29 12:51 IST   |   Update On 2023-09-29 12:51:00 IST
  • அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தன.
  • நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.

கடலூர்:

கடலூர்-மடப்பட்டு சாலை விரிவாக்க பணி நெடுஞ்சாலை துறை சார்பில் 230 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒரு கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யாமல் ஒருபுறம் கால்வாய் அமைக்காமல் சாலை அமைத்து வருவதை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி இன்று காலை நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள்விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன், நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், சமூக ஆர்வலர் குமரவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன், த.வா.க, கார்த்திக், பகுதி குழு செயலாளர் ஜெய பாண்டியன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, நகர தலைவர் ரவிக்குமார், பா.ஜ.க நகர தலைவர் வேலுமணி, வர்த்தக சங்க அபுசலீம், ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் அரசியல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் உரிய முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். 

Tags:    

Similar News