உள்ளூர் செய்திகள்

பொருட்காட்சியின் முகப்பு தோற்றம்.

பாளையங்கோட்டையில் முதன்முறையாக மாபெரும் பொருட்காட்சி - 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-04-27 08:55 GMT   |   Update On 2023-04-27 08:55 GMT
  • பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
  • பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது.

நெல்லை:

பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.

பாளை மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது. மேலும் பொருட்காட்சி யில் வண்ண வண்ண மீன்களின் கண்காட்சி, சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்கா, பெண்களுக்கான ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால் மற்றும் உணவு திருவிழா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடக்கிறது. ஆழ்கடல் மீன்கள் கண்காட்சியானது சிங்கப்பூர், மலேசியாவில் இடம் பெறுவது போல் தற்போது முதன் முறையாக பாளையில் நடைபெற உள்ள பொருட்காட்சியில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News