உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

Published On 2023-08-29 14:52 IST   |   Update On 2023-08-29 14:52:00 IST
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்தவர் டயானா இவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 50 அடி ஆழமுள்ள வயல் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. ஆடு கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனே தீயணைப்பு நிலை அலுவலர் பொறுப்பு மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தவித்துக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை யினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Tags:    

Similar News