என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு உயிருடன் மீட்பு"

    கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்தவர் டயானா இவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 50 அடி ஆழமுள்ள வயல் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. ஆடு கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனே தீயணைப்பு நிலை அலுவலர் பொறுப்பு மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தவித்துக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை யினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


    • மங்கலம்பேட்டை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • ஆட்டின் உரிமையாளர் லோகேஷ் இடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே கோ.பூவனுர், மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகேஷ் (வயது. 38), விவசாயி. இவரது 6 மாத ஆடு ஒன்று, அப்பகுதியில், சரவணன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள 5 அடி விட்டமும், சுமார் 50 அடி ஆழமும் கொண்ட, தண்ணீர் இல்லாத உறைக் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலி ன்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஐயப்பன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஸ்தகீன், முகமது புன்யாமீன், மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் விரைந்து சென்று, 6 மாத ஆட்டினை உயிருடன் மீட்டு, ஆட்டின் உரிமையாளர் லோகேஷ் இடம் ஒப்படைத்தனர்.

    ×