உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டினை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். 

மங்கலம்பேட்டை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

Published On 2022-08-28 11:44 IST   |   Update On 2022-08-28 11:57:00 IST
  • மங்கலம்பேட்டை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
  • ஆட்டின் உரிமையாளர் லோகேஷ் இடம் ஒப்படைத்தனர்.

கடலூர்:

விருத்தாசலம் அருகே கோ.பூவனுர், மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகேஷ் (வயது. 38), விவசாயி. இவரது 6 மாத ஆடு ஒன்று, அப்பகுதியில், சரவணன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள 5 அடி விட்டமும், சுமார் 50 அடி ஆழமும் கொண்ட, தண்ணீர் இல்லாத உறைக் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலி ன்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஐயப்பன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஸ்தகீன், முகமது புன்யாமீன், மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் விரைந்து சென்று, 6 மாத ஆட்டினை உயிருடன் மீட்டு, ஆட்டின் உரிமையாளர் லோகேஷ் இடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News