உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

உத்தமபாளையத்தில் கயிறு மில்லில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2023-11-15 05:12 GMT   |   Update On 2023-11-15 05:12 GMT
  • குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தகவல் தெரிவித்தனர்.
  • உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையநம்பி. இவர் அனுமந்தன்பட்டி தீட்டிபாைற சாலையில் உள்ள வள்ளியம்மன் குளம் அருகே கயிறு மில் வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் மில்லை பூட்டி சென்றனர். இந்த நிலையில் குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் தீபக் மற்றும் பாண்டி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்து றையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.

இருந்தபோதும் சுமார் ரூ. 7½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News