உள்ளூர் செய்திகள்

நகை பறித்த கொள்ளையரை துரத்திச் சென்ற அரசு பெண் ஊழியர்.

Published On 2022-09-23 13:00 GMT   |   Update On 2022-09-23 13:00 GMT
  • நகை பறித்த கொள்ளையரை அரசு பெண் ஊழியர் துரத்தி சென்றார்.
  • அப்போது தவறி விழுந்து அவர் சுயநினைவை இழந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் வீரகனூர் அடுத்த கவர்பனை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. வரித்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி (வயது 32). இவர் ஊராட்சியில் களப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், சம்பவத்தன்று லத்துவாடி சோதனை சாவடி பகுதியில் மொபட்டில் சென்று கொண்டி ருந்தபோது, பின்னல் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், அக்கா என கூப்பிட்டனர். இதனால் தேவி, தனது மொபட்டை நிறுத்தியபோது, அருகில் வந்த வாலிபர்கள் , தேவி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர். சுதாரித்துக்கொண்ட தேவி தாலியை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

ஆனால், அந்த வாலிபர்கள் இழுத்ததில் 3 பவுன் செயின் மட்டும் துண்டானது. அந்த செயினுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதை கண்ட தேவி, தனது மொபட்டில், அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.

இதை கண்ட அக்கம், பக்கத்தினர், அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சையில் குணமடைந்த தேவி, தனக்கு நடந்த சம்பவம் குறித்து வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுதார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News