உள்ளூர் செய்திகள்

சின்ன சேலம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய விவசாயி பலி

Published On 2023-01-22 06:54 GMT   |   Update On 2023-01-22 06:54 GMT
  • வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டி ருந்த பொழுது திடீரென செல்வராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 43).விவசாயி. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். இதனால் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டி ருந்த பொழுது திடீரென செல்வராஜிக்கு வலிப்பு ஏற்பட்டது.

பின்னர் அருகில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கச்சிரா யபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News