உள்ளூர் செய்திகள்

சிறுவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம்

Published On 2023-02-21 08:01 GMT   |   Update On 2023-02-21 08:01 GMT
  • மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றார்.
  • விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு காஞ்சிபுரம் கோவில்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது தந்தை துரைசாமி(வயது53). விவசாயியான துரைசாமி, நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த நெடுங்காடு கீழ்பொன் பேத்தியைச்சேர்ந்த சுப்பிரமணியனின் 17 வயது மகன் மோதினார். இதில், துரைசாமி மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்தார். தகவல் அறிந்த வேல்முருகன், தந்தையை காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர், சிறுவனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து, விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News