உள்ளூர் செய்திகள்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

Published On 2023-04-22 10:15 GMT   |   Update On 2023-04-22 10:15 GMT
  • தென்னை மரத்தில் ஏறி தென்னை ஓலையை வெட்டியுள்ளார்.
  • அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). இவர் விவசாயம் செய்து வந்தார்.

இவரது மகளுக்கு நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் பந்தல் போடுவதற்காக தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தென்னை ஓலையை வெட்டியுள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக சண்முகம் தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தொப்புர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News