உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்

Published On 2022-08-25 15:25 IST   |   Update On 2022-08-25 15:25:00 IST
  • ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றார்.
  • அங்கு பெருமாள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 கிருஷ்ணகிரி,

தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணிக்கள் பகுதி கோழி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அப்போது இவருக்கும் அந்த பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த 15 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றார். அங்கு பெருமாள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த சிறுமி தனது தந்தையிடம் அழுது கூறினார்.

இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News