உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற ரோகித், கோகுல்நாத், இளைஞன் ஆகியோரை படத்தில் காணலாம்.

பார்வையற்ற 3 மகன்களை வளர்க்க கஷ்டப்படும் தம்பதியினர்

Published On 2023-06-19 14:57 IST   |   Update On 2023-06-19 14:57:00 IST
  • மகன்களின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகிறேன்.
  • வீட்டில் பசு மாடு வளர்ப்பால் கிடைக்கும் பால் வருவாயில் ரேசன் பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வீரமலை ஊராட்சிக்குட்பட்ட காவேரிநாயக்கன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது42). கூலி தொழிலாளியான இவர், கிராமத்தில் கிடைக்கும் அனைத்து விவசாய வேலைகளையும் செய்து வருகிறார்.

இவரது மனைவி முருகம்மாள் (32), இரண்டு மாடுகளை வைத்து பராமரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு இளைஞன் (14), கோகுல்நாத் (12) மற்றும் ரோகித் (7) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூவரும் பிரவியிலேயே பார்வை குறைபாடுடன் பிறந்துள்ளனர்.

இவர்கள் முவரும் வீரமலை அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இரண்டாது மகனான கோகுல்நாத் கண்பார்வை இல்லாமலும் மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டும் இருந்து வருகிறார். பார்வையற்ற தனது இரு மகன்களையும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள கண் மருத்துவமனையில் பரிசோதித்த்தில் அவர்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கை விரித்துவித்துவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மூன்றாவது மகனுக்கு இதே நிலைதான் இருக்கும் என எண்ணி இதுவரை எந்த மருத்துவரிடமும் காண்பிக்காமல் இருந்து வருகிறார்.

தமிழக அரசு மூன்று மகன்களுக்கு மருத்துவ வசதிகளையும், உதவித்தொகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், எனது மகன்களின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகிறேன்.

வீட்டில் பசு மாடு வளர்ப்பால் கிடைக்கும் பால் வருவாயில் ரேசன் பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறோம். அரசு மூலம் பார்வையற்ற எனது மூன்று மகன்களுக்கும் இதுவரை எவ்வித சலுகையும் கிடைக்கவில்லை.

உதவித்தொகைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்தும் பலனில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளதாகவும், தமிழக முதல்-அமைச்சர் கருணை கொண்டு மூன்று மகன்களுக்கு மருத்துவ வசதிகளையும், உதவித்தொகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News