உள்ளூர் செய்திகள்
வடமதுரை போலீசில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி
- பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். பாளையம் செட்டியூர் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் சக்திவேல் (27). உறவினரான 2 பேரும் 2 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சக்திவேல் குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தனர். ஆனால் பெண் வீட்டார் மறுத்ததால் அருணாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சக்திவேல் கூடலூரில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மேஜர் என்பதால் விருப்பப்படி வாழ அறிவுரை கூறிய போலீசார் அனுப்பி வைத்தனர்.