உள்ளூர் செய்திகள்
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், உள்பட 5 பேர் மீது வழக்கு
- உறவினர்களான ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
- உறவினர்கள் ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேைல பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (22). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ரம்யாவை அடிக்கடி ராஜ்குமார் அடித்து துன்புறுத்தியுள்ளார். அவருடன் மாமனார் சீனிவாசகுமார் (52) மற்றும் உறவினர்களான ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரம்யா ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் சீனிவாசகுமார், அவரது உறவினர்கள் ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.