திருநாவலூர் அருகே கெடிலத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 5 பேர் மீது வழக்கு
- திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
- மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருநா வலூர் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி, திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் தலைமையிலான போலீசார் கெடிலம் ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது, 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்படுவதை போலீசார் பார்த்தனர். மணலை திருடி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த 5 பேரை பிடிக்க போலீசார் முயற்சித்தனர்.
இதில் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து திருட்டு மணலை ஏற்ற பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் ெகாண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிமிரெட்டிப் பாளையத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 30), வைப்பாளையத்தை சேர்ந்த ராஜா (35), தியாகராஜ் (40), வெங்கடாஜலபதி (37), களத்தூரை சேர்ந்த மணயரசன் (39) ஆகியோர் மாட்டு வண்டியின் உரிமை யாளர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.