உள்ளூர் செய்திகள்

கோவை அருகே சாலையில் நின்ற சரக்கு ஆட்டோ மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

Published On 2023-06-05 15:02 IST   |   Update On 2023-06-05 15:02:00 IST
  • பாஸ்கர் சாமிதாஸ் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.
  • சாலையோரம் நின்ற சரக்கு ஆட்டோ மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

கவுண்டம்பாளையம்

தூத்துக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் சாமிதாஸ் (வயது37). இவர் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.

இவர் சம்பவத்தன்று தனது காரில் கோவை-துடியலூர் சாலையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார்.கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது.

மேலும் அங்கு நடந்து சென்ற நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் (40) என்பவர் மீதும் மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியு ள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைராலாகி வருகிறது.

Tags:    

Similar News