உள்ளூர் செய்திகள்

கோவையில் 16 வயது சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த வாலிபர்

Published On 2023-10-28 09:03 GMT   |   Update On 2023-10-28 09:03 GMT
  • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை
  • பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டு போலீசார் விசாரணை

கோவை,

கோவை அருகே உள்ள கணுவாயை சேர்ந்த 16 வயது மாணவி.

இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம் கள்ளக்கு றிச்சியை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வரும் 19 வயது வாலிபர் ஒரு வருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.

மேலும் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வாலிபர் கோவைக்கு வந்து மாணவியை பெங்களூருக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் தடாகம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் பெங்களூரில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டனர். அவரை அழைத்து சென்று பலாத்காரம் செய்த வாபரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News