உள்ளூர் செய்திகள்

இரும்பு பட்டறையில் ஜன்னல்கள் திருடிய சிறுவன் சிக்கினான்

Published On 2023-03-27 15:06 IST   |   Update On 2023-03-27 15:42:00 IST
  • பட்டறைக்கு வந்து பார்த்தபோது வெளியே வைத்திருந்த 9 இரும்பு ஜன்னல்கள் திருடி சென்றது தெரியவந்தது.
  • இரும்பு ஜன்னல்கள் திருடிய அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பாபு (வயது 51). இவர் அரசு கலைக் கல்லூரி அருகில் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.

கடந்த 23-ந் தேதி இரவு பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை பட்டறைக்கு வந்து பார்த்தபோது வெளியே வைத்திருந்த 9 இரும்பு ஜன்னல்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாபு கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து இரும்பு ஜன்னல்கள் திருடிய அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Tags:    

Similar News