உள்ளூர் செய்திகள்

சங்கு துறை கடற்கரையில் பழுதாகி கரை ஒதுங்கிய விசைப்படகு

Published On 2023-11-08 06:47 GMT   |   Update On 2023-11-08 06:47 GMT
  • விசைப்படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் பழுது ஏற்பட்டது.
  • பழுதான படகை சரி செய்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

என்.ஜி.ஒ.காலணி, நவ.8-

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

கூடங்குளம் பகுதியில் மீன் பிடிக்க இவர்கள் சென்று கொண்டிருந்தனர். விசைப்படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் படகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் பழுதான விசைப்படகு நடுக்கடலில் தத்தளித்தது. இது குறித்து சக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கடலில் ஏற்பட்ட நீரோட்டத்தின் காரணமாக விசைப்படகு, சங்குத்துறை பீச்சில் கரை ஒதுங்கியது. தரையில் உள்ள மணல் தட்டியபடி விசைப்படகு கரை ஒதுங்கி நின்றது. இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் படகை விட்டு கீழே இறங்கி னார்கள். விசைப் படகு கரை ஒதுங்கியது குறித்து கடலோர போலீ சாருக்கும், சுசீந்திரம் போலீ சாருக்கும் தெரிய வந்தது.

அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பழுதான விசைப்பலகை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடு பட்டு உள்ளனர். பழுதான படகை சரி செய்த பிறகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

Tags:    

Similar News