உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 31 வயது லாரி டிரைவர்

Published On 2023-09-10 09:10 GMT   |   Update On 2023-09-10 09:10 GMT
  • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று கர்ப்பமாக்கினார்
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

கோவை, 

கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அய்யாசாமி (வயது 31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் அய்யாசாமி மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் தொடர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து அவர் லாரி டிரைவரிடம் கூறினார்.

இதனையடுத்து அய்யாசாமி கடந்த மாதம் 30-ந் தேதி மாணவியை திருமணம் செய்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அய்யாசாமியின் வீட்டிற்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் லாரி டிரைவர் அய்யாசாமி 16 வயது மாணவியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர்கள் செட்டிப்பா ளையம் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 16 வயது மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் அய்யா சாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News