உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்த 3 மாத பெண் யானை குட்டி

Published On 2022-07-21 15:54 IST   |   Update On 2022-07-21 15:54:00 IST
  • வேட்டை தடுப்பு களப்பணியாளா்கள் ரோந்து சென்றனா்.
  • உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச் சரக பகுதியில் கக்கனஹல்லா வேட்டை தடுப்பு முகாம் களப்பணியாளா்கள் நேற்று ரோந்து சென்றனா்.

வட்டசாலை பகுதியில் சென்றபோது அங்கு சுமாா் 3 மாத பெண் யானை குட்டியின் சடலம் உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். இதுகுறித்து வனத் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.   

Tags:    

Similar News