உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற 9 பேர் கைது

Published On 2023-11-30 07:54 GMT   |   Update On 2023-11-30 07:54 GMT
2 கடைக்கு சீல், 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது32), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (62), பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வடசிறுள்ளூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (28), சங்கராபுரத்தை சேர்ந்த ஹரிஷ் (19), திருநாவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (27), கெடிலம் கிராமத்தை சேர்ந்த ராமன் (62), திருநாவலூர் பகுதியை சேர்ந்த சுகுமார் (44), தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விக்ரம் (37), திருநாவலூரை சேர்ந்த வெங்கடேசன் (45), மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த நதியா (36), சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70), கதிரவணன் (60) ஆகியோர் அவர்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 13 நபர்கள் மீதும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 9 கைது செய்யப்பட்டனர். 2 கடைகளுக்கு வருவாய் துறையினரால் மூலம் சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News