பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை- பணம் திருட்டு
- 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்தவைகள் திருடப்பட்டிருந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருமண வேலை சம்பந்தமாக பிரகாஷ் வீட்டை பூட்டு விட்டு வெளியே சென்றார். பின்னர் விட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது விட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வீட்டிற்குள் சென்று பார்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் திருமணத்திற்காக வைத்திருந்த இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து பிரகாஷ் வேதாரண்யம் ேபாலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், நாகையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.