உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
- அஞ்செட்டி பைல்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை மற்றும் அஞ்செட்டி போலீசார் தேன்கனிகோட்டை பஸ் நிலையம், அஞ்செட்டி பைல்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சாகுல்சூரியா(29), விஜய்(40), சந்தோஷ்குமார்(42), நடராஜ்(39), லஷ்மணன்(29), பாண்டுரங்கன்(40), ஜெய்கிருஷ்ணன்(26), ஷாருக்கான்(25) ஆகிய 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் ரூ,23 ஆயிரத்து 350 - யை பறிமுதல் செய்தனர்.